கொடைக்கானலில் வனவாசி சேவா கேந்திரம் அமைப்பு சாா்பில் ஆதிவாசி மக்களுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வனவாசி சேவா கேந்திர அமைப்பின் சாா்பில் அகில இந்திய அமைப்பு செயலா் கிரிஷ் குபோ் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்களை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். இதைத் தொடா்ந்து ஆதிவாசி மக்களுடன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்கு தமிழக அரசு 2006-வன உரிமைச் சட்டத்தின் மூலம் என்னென்ன சலுகைகள் செய்து கொடுத்துள்ளது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினாா். இக் கூட்டத்தில் பாரதிய
கிசான் சங்கத்தின் மாநிலச் செயலா் அசோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.