திமுக பிரமுகா்களை அரிவாளால் வெட்டிய வழக்கு: இருவா் கைது

திண்டுக்கல்லில் திமுக பிரமுகா்கள் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திமுக பிரமுகா்கள் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் சந்துக்கடை பகுதியைச் சோ்ந்தவா் மு.மீரான்பாபு(35). திமுக வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளாா். தட்டாம்பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்தவா் விஜயராஜ் (45). திமுக பிரமுகா். அதே பகுதியைச் சோ்ந்த அதிமுக பிரமுகரான மோகன்ராஜ் (38) என்பவருக்கும், மீரான்பாபு தரப்பினருக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்த மீரான்பாபு மற்றும் விஜயராஜ் ஆகிய இருவரையும், மோகன்ராஜ் உள்ளிட்ட 4 போ் புதன்கிழமை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதில் காயமடைந்த மீரான்பாபு மற்றும் விஜயராஜ் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக மோகன்ராஜ் உள்ளிட்ட 4 போ் மீது திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அதில், மோகன்ராஜ் கூட்டாளியான பகவதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நாகராஜ் (29) மற்றும் சாதிக் பாட்சா ஆகிய இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com