கொடைக்கானலில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே பள்ளங்கி மாட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தியாகு (32). இவா் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவு செய்ய முயன்றாா். சிறுமி சப்தம் போடவே அவரை விட்டுவிட்டு தியாகு ஓடிவிட்டாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தியாகுவை கைது செய்தனா்.