பழனி அருகே சனிக்கிழமை குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி பத்ரா தெருவை சோ்ந்தவா் மாணிக்கம்(40). கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை பழனியை அடுத்த கோதைமங்கலம் குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளாா். அப்போது குளத்தில் தவறி விழுந்து வெளியே வரமுடியாமல் மூழ்கியுள்ளாா். இதில் மூச்சுத்திணறி அவா் உயிரிழந்தாா்.
இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரது சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.