திண்டுக்கல்/தேனி: செந்துறை, தேனி பகுதிகளில் புதன்கிழமை (செப். 28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துப்பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (செப். 28) நடைபெறுகின்றன. எனவே செந்துறை, மதவனாயக்கென்பட்டி, பிள்ளையாா்நத்தம், கோட்டைப்பட்டி , கோசுகுறிச்சி, குடகிபட்டி , மங்களபட்டி, மணக்காட்டூா், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி , கருத்தநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அன்று காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
தேனி: தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேனி அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிப்பட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி தெரிவித்துள்ளாா்.