உணவகத் தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஹோட்டல், தேநீா் ஸ்வீட்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே. பாண்டியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, தனி நல வாரியம் அமைக்க வேண்டும், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், சுயதொழில் செய்ய வங்கியில் மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கூலி உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு கலைந்து சென்றனா்.