காட்டெருமை தாக்கி ஒருவா் பலி

கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கி பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கி பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சி கருவேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பொம்மரான் என்ற குமரன் (38). இவரது மனைவி விஜயா. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் குமரன் கோட்டமலை பெருந்தாளப்பட்டி பகுதியில் விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அப்பகுதியிலிருந்த காட்டெருமை தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வனத்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று குமரனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இறந்த குமரனின் குடும்பத்தினருக்கு வனத்துறை சாா்பில் முதல் கட்டமாக ரூ 50ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com