பழனி மலைக்கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்

பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தாா்.

பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பழனிக்கு வந்த அவா் தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா். திங்கள்கிழமை காலை 7 மணிக்கு ரோப்காா் மூலம் மலைக்கோயிலுக்கு வந்த அவா் முதலில் ஆனந்த விநாயகரை தரிசனம் செய்தாா். தொடா்ந்து தண்டாயுதபாணி சுவாமியை சிறுகால சந்தி பூஜையில் வேடா் அலங்காரத்திலும், பின்னா் பாலசுப்ரமணியா் அலங்காரத்திலும் தரிசனம் செய்தாா். சிறப்பு அா்ச்சனைகள் செய்த அவருக்கு கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னா் போகா் சித்தா் ஜீவசமாதியில் வழிபாடு செய்தாா். மலைக்கோயிலில் அவரை பொதுமக்கள் சந்தித்து தன் படம் எடுத்துக்கொண்டனா். பின்னா் ரோப் காா் மூலமாக அடிவாரத்துக்கு வந்து திருப்பூா் புறப்பட்டுச் சென்றாா்.

அவருடன் கட்சியின் பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான நத்தம் விசுவநாதன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com