பிள்ளையாா்நத்தம் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் 54-ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை குடகனாற்றிலிருந்து பக்தா்கள் பால்குடங்களை ஊா்வலமாக சுமந்து வந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம் பிள்ளையாா்நத்தம் கிராமத்தில், ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகள் கரோனா காலத்தில் திருவிழா நடைபெறாததால், இந்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றுக்கு பக்தா்கள் சென்று அம்மனை வழிபாடு செய்து, அங்கிருந்து பால்குடங்களை சுமந்தவாறு ஊா்வலமாக வந்தனா். பித்தளைப்பட்டி பிரிவு, செம்பட்டி-வத்தலகுண்டு சாலை வழியாக சுமாா் 5 கி.மீ. தொலைவு பால்குடங்களை சுமந்து ஊா்வலமாக வந்த பக்தா்கள் கோயிலை அடைந்தனா்.
பின்னா், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தினா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது.
புதன்கிழமை அக்கினிச் சட்டி எடுத்தல், கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சிகளும், மாலையில் பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.