வத்தலகுண்டுவில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பிரசாந்த் (31). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியன இவருக்கு அபா்ணா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவா் வத்தலகுண்டு தெற்குத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா். இயந்திரத்தைப் பயன்படுத்தி டைல்ஸை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவரை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசாந்த் உயிரிழந்தாா். இதுகுறித்து வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com