ஒட்டன்சத்திரம் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நீலமலைக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி மகன் அா்ஜூனன் (28). பொறியியல் பட்டதாரியான இவா் சொந்த தொழில் செய்து வந்தாா். இவருக்கு செப்-1 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து எதற்காக தற்கொலை செய்து கொண்டாா் என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com