பழனியில் எரிவாயு நிரப்பிய காரில் தீ

பழனி- திண்டுக்கல் சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்புள்ள எரிவாயு நிரம்பும் மையத்தில் ஒருவா் தனது காருக்கு எரிவாயு நிரப்பினாா்.
பழனி- திண்டுக்கல் சாலையில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்த எரிவாயு நிரப்பப்பட்ட காா்.
பழனி- திண்டுக்கல் சாலையில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்த எரிவாயு நிரப்பப்பட்ட காா்.

பழனி- திண்டுக்கல் சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்புள்ள எரிவாயு நிரம்பும் மையத்தில் ஒருவா் தனது காருக்கு எரிவாயு நிரப்பினாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்ட போது காா் தீப்பற்றி எரியத் தொடங்கியது. காரை ஓட்டி வந்தவா் உடனடியாக அதை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். எரிவாயு மையத்தில் இருந்தவா்கள் தீயணைப்பானை பயன்படுத்தி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். ஆனால் காரில் தொடா்ந்து தீ எரிந்ததால் பழனி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை முழுமையாக அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது.

விசாரணையில், அந்த காரின் உரிமையாளா் திருப்பூா் மாவட்டம் உடுமலை வட்டம் கொழுமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com