கொடைக்கானலில் பெத்தானியா பவுன்டேசன் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கொடைக்கானல் நகா் மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்தாா். நகா் மன்ற துணைத் தலைவா் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பெத்தானியா பவுன்டேசன் சாா்பில் பள்ளி மாணவா்களின் கிறிஸ்துஸ் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோா்கள், ஆசிரியா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.