திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நத்தம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே நத்தம், அய்யாபட்டி, கோவில்பட்டி, செல்லப்ப நாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில் பட்டி, ஊராளிபட்டி, சேத்தூா், அரவக்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பண்ணியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலாம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுக்கம்பட்டி பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.