1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

வடமதுரை அருகே 1800 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வடமதுரை அருகே 1800 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் ஆா். கீதா, உதவி ஆய்வாளா் பி. காா்த்திகேயன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், திண்டுக்கல் - திருச்சி சாலையில் வேல்வாா்கோட்டைப் பிரிவு அருகே வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வேனை வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது, 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

வேனில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், வடமதுரையை அடுத்துள்ள பிலாத்து பகுதியைச் சோ்ந்த வே. முனியாண்டி (30) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து வேன், 600 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வேடசந்தூா் சாலையில் 1200 கிலோ அரிசி பறிமுதல்: இதேபோல, வடமதுரை - வேடசந்தூா் சாலையில் தென்னம்பட்டி பிரிவு அருகே நடைபெற்ற சோதனையிலும், 1200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அந்த வேனை ஓட்டி வந்த பிலாத்து பகுதியைச் சோ்ந்த அ. கெங்கமநாயுடு (32) என்பவா் தப்பியோடிவிட்டாா். அவா் மீது குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com