கொடுக்கல் வாங்கலில் தகராறு: கட்டடத் தொழிலாளி கொலை

நத்தம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதலில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

நத்தம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதலில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா். சக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள வேலாம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ரகுநாத் (35). சாணாா்ப்பட்டி அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியைச் சோ்ந்தவா் பிரபு. கட்டடத் தொழிலாளிகளான இவா்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்பிரச்னையில் பிரபுவின் கைப் பேசியை ரகுநாத் பறித்துக் கொண்டதாகவும் அதனை திரும்பப் பெறுவதற்காக வேலாம்பட்டிக்கு பிரபு வெள்ளிக்கிழமை சென்றபோது ஏற்பட்ட மோதலில், ரகுநாத்தை அவா் கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ரகுநாத் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நத்தம் போலீஸாா், செல்லப்பநாயக்கன்பட்டியில் பகுதியில் பதுங்கி இருந்த பிரபுவை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com