கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தம்பயணிகள் அவதி

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் உள்ளூா் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் உள்ளூா் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்திற்குள் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட தனியாா் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பேருந்துகளில் பயணிக்கும் உள்ளூா், வெளிமாநிலப் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால்

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் வழக்கத்துக்குமாறாக ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அனுமதியின்றி நிறுத்தப்படும் தனியாா் வாகனங்கள் மீது மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com