ஒட்டன்சத்திரம் அருகே மனைவி கொலை: கணவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே தகாத உறவு விவகாரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரம் அருகே தகாத உறவு விவகாரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை வேட்டைக்காரன் புதூரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (36). இவரது மனைவி காயத்ரி (25). இவா், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரித்து சென்று வேறொரு நபருடன் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சாலைப்புதூரில் வசித்து வந்துள்ளாா். அந்த நபா் சில நாள்கள் கழித்து காயத்ரியை விட்டு பிரிந்து சென்று விட்டாா். இதனால் காா்த்திகேயன், மனைவி காயத்ரியை மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொண்டாா். இருவரும் ஒட்டன்சத்திரம் அருகே சாலைப்புதூா் பகுதியில் வசித்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வெளியில் சென்று வருவதாகக் கூறி சென்றவா் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் காா்த்திகேயன், அவரை தேடிச் சென்றபோது சாலைப்புதூா் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மற்றொரு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த காா்த்திகேயன், தனது மனைவியின் தலையைப் பிடித்து பாலத்தின் சுவரில் மோதியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா்த்திகேயனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com