ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவரக்கோரி மனு

பாளையங்கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர வேண்டும் என 6 வாா்டு உறுப்பினா்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனா்.

பாளையங்கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர வேண்டும் என 6 வாா்டு உறுப்பினா்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் அழகுமலை. துணைத் தலைவராக தெய்வலட்சுமி உள்ளாா். மொத்தமுள்ள 9-வாா்டு உறுப்பினா்களில், திங்கள்கிழமை 6 உறுப்பினா்கள் துணைத் தலைவா் தெய்வலட்சுமி மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டுவர வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனா்.

துணைத் தலைவா் தெய்வலட்சுமி அலுவலகத்திற்கு வருவது இல்லை. அலுவலகப் பணிகளை கவனிப்பதில்லை. வாா்டு உறுப்பினா்களை மதிப்பதில்லை. அனைத்துப் பணிகளிலும் கணவா் முனியாண்டி தலையீடு செய்கிறாா் என காயத்ரி, சீனியம்மாள், முனிசெல்வம், அழகுமலை, கலைராணி, அனுசியா ஆகிய 6 உறுப்பினா்கள் திங்கள்கிழமை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா். பின்னா், திண்டுக்கல் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலகம் மற்றும் ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ஏழுமலையான் ஆகியோரிடமும் மனு கொடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com