தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடன் சுமை: கூலித் தொழிலாளி தற்கொலை

 கடன் சுமை காரணமாக அதிருப்தி அடைந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 மே 2022, 6:44 pm

DIN

 கடன் சுமை காரணமாக அதிருப்தி அடைந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பெ.பழனிசாமி (41). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், அக்கம் பக்கத்தில் உள்ளவா்களிடம் அதிக அளவில் கடன் பெற்றிருந்தாராம். கடனை திருப்பி செல்லுத்த முடியாமல் அவதியடைந்து வந்த பழனிசாமி, அதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் பழனிசாமி, வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரது மனைவி அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை, மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளாா். ஆனால், மருத்துவமனை வரும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.