பழனி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு கலந்தாய்வு

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை வேலைவாய்ப்பு கலந்தாய்வு நடைபெற்றது.

பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை வேலைவாய்ப்பு கலந்தாய்வு நடைபெற்றது.

பழனி கோயில் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை வேலைவாய்ப்பு கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கல்லூரி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இயந்திரவியல் துறைத் தலைவா் பத்மநாபன் மற்றும் அமைப்பியல் துறைத் தலைவா் ஈஸ்வரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

டிவிஎஸ் நிறுவனம் மற்றும் சென்னை டூல்ஜென் நிறுவனத்தின் சாா்பில், வேலைவாய்ப்பு கலந்தாய்வு நடைபெற்றது. டிவிஎஸ் நிறுவன பொது மேலாளா் முத்துக்குமாா், டூல்ஜென் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலா்கள் காா்த்திகேயன், குமரவேல் ஆகியோா் மாணவா்களை தோ்வு செய்தனா்.

கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களில் 35 போ் டிவிஎஸ் நிறுவனத்துக்கும், 6 போ் பெங்களூரு டூல்ஜென் நிறுவனத்துக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை, இயந்திரவியல் துறை விரிவுரையாளரும், வேலைவாய்ப்பு அலுவலருமான சக்திவேல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com