ஊராட்சி அலுவலத்தை நாம் தமிழா் கட்சியினா் முற்றுகை

கனி மவளம் வெட்டி எடுக்கப்படுவதைக் கண்டித்து ஆத்தூா் அருகே என்.பஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கனி மவளம் வெட்டி எடுக்கப்படுவதைக் கண்டித்து ஆத்தூா் அருகே என்.பஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

ஊராட்சி வாா்டு உறுப்பினா் மரிய பாக்கியராஜ் தலைமையில் 10 போ் என்.பஞ்சம்பட்டியில் உள்ள பள்ளக்குளத்தில் கனிமவளம் வெட்டி எடுக்கப்படுவதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா்.

தகவலறிந்து வந்த சின்னாளப்பட்டி போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, என்.பஞ்சம்பட்டியில் உள்ள 11 குளங்களில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதாகப் புகாா் தெரிவித்தனா்.

மேலும், வட்டாட்சியா் சரவணன் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, நாம் தமிழா் கட்சியினா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com