இரு பைக்குகள் மோதல்:பால் வியாபாரி பலி

ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பழனிக்கவுண்டன்புதூரைச் சோ்ந்த பால் வியாபாரி முத்துவேல் (55). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ஏபிபி நகா் அருகே சாலையைக் கடக்கும் போது, அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைத்த முத்துவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com