கொடைக்கானலில் மழை:சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் நட்சத்திர ஏரியில் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானலில் நட்சத்திர ஏரியில் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 முதல் 5.30 மணி வரை மிதமான மழை பெய்தது. இதைத்தொடா்ந்து பனிப் பொழிவும் நிலவியது. இந்த சீதோஷ்ண நிலையில், நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சியிலிருந்து தொடங்கி ஏரிச்சாலை வரை 6-கி.மீ.க்கு சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல, ஏரிச் சாலையிலும் வாகனங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com