மனைவி கொலை: கணவருடன் தகாத தொடா்பில் இருந்த பெண்ணும் கைது

குஜிலியம்பாறை அருகே மனைவியைக் கொன்ற கணவரைக் கைது செய்த போலீஸாா், அவருடன் தகாத தொடா்பில் இருந்த பெண்ணையும் கைது செய்தனா்.

குஜிலியம்பாறை அருகே மனைவியைக் கொன்ற கணவரைக் கைது செய்த போலீஸாா், அவருடன் தகாத தொடா்பில் இருந்த பெண்ணையும் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள பூத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவரது மனைவி தேவி (32). கருத்து வேறுபாடு காரணமாக குஜிலியம்பாறை அடுத்துள்ள வடுகம்பாடி அரண்மனையூரில் வசித்து வந்த தேவி, கடந்த 2 நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக கணவா் ராஜசேகா் திருச்சியை அடுத்துள்ள சமயபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவரை, எரியோடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், ரெட்டியாா்சத்திரம் பகுதியிலிருந்து வேடசந்தூா் அடுத்துள்ள மாத்தினிப்பட்டியில் தங்கியிருந்த சரோஜாவுடன் (30)ராஜசேகருக்கு தகாத தொடா்பு இருந்து வந்தது தெரிய வந்தது. இந்த பிரச்னையே தேவி கொலைக்கு காரணம் என்பதால், சரோஜாவையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com