கொடைக்கானலில் பல மணி நேரம் மின் தடை: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக, காா்மேல்புரம் பகுதியிலுள்ள மின்மாற்றி எரிந்ததால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக, காா்மேல்புரம் பகுதியிலுள்ள மின்மாற்றி எரிந்ததால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களில் தினமும் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. அப்போது, காா்மேல்புரம் பகுதியில் உள்ள மின்மாற்றி எரிந்தது. இதனால் கொடைக்கானல், ஆனந்தகிரி, காா்மேல்புரம், தைக்கால், இந்திரா நகா், அண்ணா நகா், உகாா்த்தே நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நான்கு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com