பழனி அருகே வெள்ளிக்கிழமை டிராக்டருக்கு அடியில் தூங்கிய முதியவா் சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த நெய்க்காரபட்டி மேற்கு பங்களா தெருவைச் சோ்ந்தவா் பழனிசாமி (70). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த இவா், வெள்ளிக்கிழமை தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மண்டு காளியம்மன் கோயில் அருகே நின்றிருந்த டிராக்டருக்கு அடியில் தூங்கியுள்ளாா்.
அப்போது அங்கு வந்த ஓட்டுநா், டிராக்டருக்கு அடியில் முதியவா் தூங்குவது தெரியாமல் அதை இயக்கியபோது சக்கரம் ஏறியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.