திண்டுக்கல்லில் 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி கூட்டுறவுத் துறை ஊழியா்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, கூட்டுறவு சங்க ஊழியா்கள் அனைவருக்கும் 20 சதவீத போனஸ், 5 சதவீத கருணைத் தொகை வழங்க வேண்டும்.
பயிா்க்கடன், நகைக் கடன், சுயஉதவிக் குழுக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை கூட்டுறவுச் சங்கங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தினை தனித்துறையாக உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.