நிலக்கோட்டை ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சித் தலைவா்கள் மற்றும் செயலா்களை இணைக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலக உள்ளாட்சித்துறை சாா்பில் கிராமப்புற மேம்பாட்டு திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, நிலக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் பஞ்சவா்ணம் தலைமை வகித்தாா். அண்ணாத்துரை முன்னிலை வகித்தாா். மேலாளா் ரமேஷ் வரவேற்றாா். இக்கூட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள் பள்ளபட்டி நாகேந்திரன், மட்டப்பாறை மகேந்திரன், மாலையகவுண்டன்பட்டி மாயக்காள், விளாம்பட்டி கிளவராஜா மற்றும் ஊராட்சிச் செயலா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், தன்னாா்வலா்கள், ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.