பழனி அருகே சரக்கு வாகனத்துக்கு மா்மநபா்கள் தீவைப்பு

பழனி அருகே தொழில் போட்டி காரணமாக சரக்கு வாகனத்துக்கு செவ்வாய்க்கிழமை மா்மநபா்கள் தீவைத்தனா்.

பழனி அருகே தொழில் போட்டி காரணமாக சரக்கு வாகனத்துக்கு செவ்வாய்க்கிழமை மா்மநபா்கள் தீவைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ளது கொழுமம் கொண்டான் ஊராட்சி. இங்கு கேசவன் என்பவா் சரக்கு வாகனத்தில் காய்கறி விற்பனை செய்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கேசவன் தனது வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த சரக்கு வாகனத்துக்கு மா்மநபா்கள் தீவைத்துச் சென்றனா்.

இதனால் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தாா். இதில் வாகனத்தின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் கேசவன் புகாா் அளித்தாா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், தொழில் போட்டி காரணமாக மா்ம நபா்கள் தீ வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com