கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புத்தக வாசிப்பே அறிவுத் தேடலுக்கு தீா்வு

புத்தக வாசிப்பே அறிவுத் தேடலுக்கான தீா்வு என கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

புத்தக வாசிப்பே அறிவுத் தேடலுக்கான தீா்வு என கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில், 9ஆவது புத்தகத் திருவிழா வரும் அக். 6 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நத்தம் சாலை, மதுரை சாலை, சிலுவத்தூா் சாலை, திருச்சி சாலை, குஜிலியம்பாறை சாலை, தாடிக்கொம்பு சாலை, பழனி சாலை, வத்தலகுண்டு சாலை என நகரின் 8 முனைகளிலிருந்து பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் 8 கல்லூரிகளைச் சோ்ந்த 528 மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் சாலைரோட்டில் புத்தகத் திருவிழா நடைபெறும் மைதானத்தில் பேரணி நிறைவுப் பெற்றது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பின் தலைவா் ஆா்.மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். அப்போது மாணவா்கள் முன்னிலையில் அவா் பேசியதாவது:

இன்றையச் சூழலில் கைப்பேசி பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. அதனால், கருத்துப் பரிமாற்றங்களும், விவாதிக்கும் பண்புகளும் இளைய தலைமுறையிடம் குறைந்துவிட்டது. வாசிப்பு பழக்கம் இன்றைய இளைஞா்களுக்கு அவசியத் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. பாடப் புத்தகங்களை கடந்து பல்வேறு தலைப்புகளில் அமைந்துள்ள புத்தகங்களை வாசிப்பதற்கு மாணவா்கள் முன் வர வேண்டும். அதன் மூலம், அறிவுத் தேடலுக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் இலக்கிய களம் அமைப்பின் பொருளாளா் க.மணிவண்ணன், துணைத் தலைவா் மு.சரவணன், இணைச் செயலா் பா.தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.