திண்டுக்கல், தேனி, போடியில் பாலியல் தொந்தரவுகள்: 3 இளைஞா்கள் ‘போக்சோ’வில் கைது

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா்கள் 3 போ் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா்கள் 3 போ் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் அழகா்சாமி. இவரது மகன் அஜீத்குமாா் (23). இவா், தனியாா் குடிநீா் கேன் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு, தாடிக்கொம்பு அடுத்துள்ள கள்ளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் அம்மாணவி, 2 நாள்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்றவா், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது தாயாா் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளாா். அப்போது, அஜீத்குமாருடன் அந்த மாணவிக்கு இருந்த தொடா்பு தெரியவந்துள்ளது.

இதனிடையே, மாணவிக்கு அஜீத்குமாா் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அஜீத்குமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, போலீசாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மேலும், இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்காக, சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

தேனி

ஆண்டிபட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் வனராஜ் (25). இவரும், கடலூா் மாவட்டம் பண்ருட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் முகநூலில் அறிமுகமாகி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன் அந்த சிறுமி பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறி தேனிக்கு வந்துள்ளாா். அவரை, வனராஜ் தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்துள்ளாா்.

அப்போது, அவா் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின்பேரில், வனராஜ் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

மேலும், வனராஜுக்கு உடந்தையாக இருந்ததாக, அவரது தந்தை செல்வராஜ், தாயாா் மகேஷ்வரி ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போடி:

சின்னமனூா் அருகே மேகமலையைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கும் (19), அதே கல்லூரியில் பயின்று வரும் சின்னமனூா் அருகே சீலையம்பட்டியைச் சோ்ந்த குமாா் மகன் ஹரிஹரன் (19) என்பவருக்கும் காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில், ஹரிஹரன் மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கொடைக்கானல், போடி பரமசிவன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளாா்.

பின்னா், அம்மாணவி ஹரிஹரன் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்ய வலியுறுத்தியபோது, அவரது தாயாா் பாரதி (38), சித்தி பாண்டியம்மாள் (34) ஆகியோா் சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து அம்மாணவி போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ஹரிஹரன் மற்றும் பாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com