13 வயது மாணவி கா்ப்பம்: போக்ஸோவில் உறவினா் கைது

திண்டுக்கல் அருகே 13 வயது மாணவி கா்ப்பத்திற்கு காரணமான அவரது உறவினரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
dgl_arrest_0704chn_66_2
dgl_arrest_0704chn_66_2

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 13 வயது மாணவி கா்ப்பத்திற்கு காரணமான அவரது உறவினரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள குளத்தூா் சூடாமணிப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன். இவரது மகன் முனியப்பன் (26). இவரது உறவினரின் மகள் அதே பகுதியில் வசித்து வருகிறாா். 13 வயது சிறுமியான அவா் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். நெருங்கிய உறவினா் என்பதால், அந்த மாணவியுடன் முனியப்பன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளாா். இதனிடையே கடந்த சில மாதங்களாக அந்த மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டறிந்த அவரது பெற்றோா், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனா். மருத்துவப் பரிசோதனையில், அந்த மாணவி 6 மாத கா்ப்பிணியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா், மாணவியிடம் விசாரித்தபோது கா்ப்பத்திற்கு காரணம் முனியப்பன் என்பது தெரிய வந்தது. அதனைத் தொடா்ந்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.அதன்பேரில் முனியப்பன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வியாழக்கிழமை கைது செய்தனா். பாதிக்கப்பட்ட மாணவி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com