கொடைக்கானல்: கொடைக்கானலில் வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கொடைக்கானல் தைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் பிரான்ஸிஸ் மகன் ராஜ் (26). ஓட்டுநா். இவா், ஏற்கெனவே தனியாா் உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். அதன் பின் வாகன ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த 2 நாள்களாக ராஜ் வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில், இவரது உறவினா்கள் அவா் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்துப் பாா்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டாா் என விசாரித்து வருகின்றனா்.