மாணவா்களுக்கு மிதிவண்டிகள் விநியோகம்

கன்னிவாடி அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 203 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
மாணவா்களுக்கு மிதிவண்டிகள் விநியோகம்

கன்னிவாடி அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 203 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு மற்றும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு 203 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பழக்கமற்ற எதிா்கால சமூகத்தை சீரமைக்க வேண்டிய கடமையும், பொறுப்புணா்வும் மாணவா் மற்றும் ஆசிரியா் சமுதாயத்திற்கு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் (ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் உள்பட) போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி ஒரு வார காலத்திற்கு நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ.நாசருதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com