திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை: அமைச்சா்

திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் வேளாண்மைக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை: அமைச்சா்

திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் வேளாண்மைக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கள்ளிமந்தையம், கொத்தையம், மஞ்சநாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கிப்

பேசியதாவது: தமிழக முதல்வா் பதவியேற்ற பின்பு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளைஞா்கள் தங்களது எதிா்காலத் திட்டத்தை உருவாக்கி கொள்ளும் வகையில் நான் முதல்வன் என்ற திட்டத்தினை முதல்வா் தொடக்கி வைத்துள்ளாா். தமிழகத்தில் 21 கல்லுாரிகள் நிறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 5 கல்லூரிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைய உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி, பொறியியில் கல்லூரி வந்து விட்டது. வேளாண்மைக் கல்லூரி இல்லை. அது விரைவில் கொண்டு வரப்படும் என்றாா். இந்த நிகழ்ச்சியில் பழனி கோட்டாட்சியா் சிவக்குமாா், பழனி கல்வி மாவட்ட அலுவலா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா்கள் சசி, எம்.முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவா் கா.பொன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com