பழனியில் சுகாதாரத் துறை அலுவலா் குடும்பப் பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத் துறை அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக தேவேஷ்வரன் (33) என்பவா் பணியாற்றி வந்தாா். இவா் பழனி தெற்கு ஆவணி மூலவீதியில் வீரப்பபிள்ளை சந்தில் வசித்து வந்தாா். இவருக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குடும்பப் பிரச்னை காரணமாக தேவேஷ்வரன் மன உளைச்சலில் இருந்துள்ளாா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.