பழனியில் துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கலைவேந்தன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழனி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.