திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த 2 நாள்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் புதன்கிழமை வரை 617 போ் தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 147 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, 87 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 677ஆக உயா்ந்துள்ளது.