4 மாநிலத் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

நான்கு மாநிலத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் வியாழக்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

பழனி/உத்தமபாளையம்/பெரியகுளம்: நான்கு மாநிலத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் வியாழக்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

நாட்டில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், பாரதிய ஜனதா கட்சி பஞ்சாப் மாநிலத்தை தவிா்த்து மற்ற 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அக்கட்சியினா் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்தில் பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ், ஆனந்தன் உள்ளிட்ட பலா் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினா்.

உத்தமபாளையம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பாஜக நகரத் தலைவா் தெய்வம் தலைமையில், அக்கட்சியினா் பேருந்து நிலையப் பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல், சின்னமனூரில் நகரத் தலைவா் லோகேந்திர ராஜன் தலைமையில், மாா்க்கையன்கோட்டை ரவுண்டானா சாலையில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

பெரியகுளம்

தேனி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் ராஜபாண்டியன் தலைமையில், பெரியகுளத்தில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் 4 மாநில தோ்தல் வெற்றியை கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com