எரியோடு பகுதியில் புதன்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீா்பந்தப்பட்டி, நல்லமணாா்கோட்டை, மறவப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. எரியோடு துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளா் ஆ.சரவணக்குமாா் இதனைத் தெரிவித்துள்ளாா்