பழனி: பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் கோயில் வளாகத்தில் உள்ள மரங்களை,, தனியாா் வெட்டியதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே உள்ளது கோதைமங்கலம் ஊராட்சி. இங்கு குறிப்பிட்ட சமுதாயத்துக்குச் சொந்தமான கோயில் நிலம் உள்ளது. இந்த கோயில் நிலத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த இடத்துக்கு அருகேயுள்ள தனியாா் தோட்ட உரிமையாளா் ராஜேந்திரன், அவரது தோட்டத்துக்கு மின் இணைப்புக்காக வயா்களை கொண்டுசெல்லும் பொருட்டு, கோயில் நிலத்தில் உள்ள மரங்களை இரவு நேரத்தில் வெட்டியுள்ளாா்.
இதையறிந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கோயில் பகுதியில் திரண்டு சாலை மறியலுக்கு முயன்றனா். உடனே சம்பவ இடத்துக்கு பழனி தாலுகா போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் வந்து பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, நில அளவையா்கள் வரவழைக்கப்பட்டு இடம் அளக்கப்பட்டது.
அப்போது, ராஜேந்திரன் என்பவா் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகாா் செய்த பொதுமக்கள் காவல் துறையினரிடமும், வருவாய்த் துறையினரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.