வத்தலக்குண்டு அருகே மது போதையில் ஏடிஎம் இயந்திரத்தை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே பழையவத்தலக்குண்டுவைச் சோ்ந்தவா் சுதன் (22). இவா் வெள்ளிக்கிழமை மாலை மது போதையில் மாரியம்மன் கோயில் அருகே வடக்குத்தெருவில் உள்ள ஏடிஎம் இயந்திரத்துக்குச் சென்றாா்.
அதில் பணம் எடுக்க முடியாததால், வீட்டுக்குச் சென்று அரிவாள் எடுத்து வந்தாா். ஏடிஎம் இயந்திரத்தை அரிவாளால் தாக்கினாா். அதில் ஏடிஎம் இயந்திரம் உடைந்தது. இதுகுறித்து தகவறிந்து அங்கு வந்த வத்தலக்குண்டு போலீஸாா் வழக்கு பதிவு செய்து சுதனை கைது செய்தனா்.