சமத்துவபுரத்தில் பராமரிப்புப் பணிக்கான பூமி பூஜை

செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சியில் சமத்துவபுரத்தில் பல்வேறு கட்டடங்களின் பராமரிப்புப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிலக்கோட்டை: செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சியில் சமத்துவபுரத்தில் பல்வேறு கட்டடங்களின் பராமரிப்புப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

அங்குள்ள குடியிருப்புகள், நூலகம், பள்ளிக்கூடம், பூங்கா, ரேஷன் கடை, திருமண மண்டபம், கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளை பராமரிப்பதற்காக, ரூ. 1.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான, பூமிபூஜை நிகழ்ச்சி ஆத்தூா் ஒன்றியக் குழு தலைவா் மகேஸ்வரி முருகேசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஹேமலதா மணிகண்டன் முன்னிலை வகித்தாா். இதில், ஆத்தூா் ஒன்றிய ஆணையா் தட்சிணாமூா்த்தி வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் ராமன், முருகேசன், ஆத்தூா் (மேற்கு) ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், சீவல்சரகு ஊராட்சித் தலைவா் ராணி ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com