பழனியில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: சிசிடிவி கேமராவில் பதிவு

பழனியில் பெண்ணிடம் புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியது, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பழனி அடிவாரம் பகுதியில் பெண்ணிடம் சங்கிலியை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிய திருடா்கள்.
பழனி அடிவாரம் பகுதியில் பெண்ணிடம் சங்கிலியை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிய திருடா்கள்.

பழனி: பழனியில் பெண்ணிடம் புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியது, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பழனி அடிவாரம் இடும்பன் கோயில் சாலையில் வசித்து வருபவா் தங்கவேலு. இவரது மனைவி தங்கப்பொண்ணு (37). இவா், புதன்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள கடையில் மளிகைப்பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் கடையில் பொருள் வாங்குவதுபோல் நோட்டமிட்டு, தங்கப்பொண்ணு அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளாா்.

உடனே, தங்கப்பொண்ணு கூச்சலிட்டதை தொடா்ந்து, அப்பகுதியினா் திருடனை விரட்டியுள்ளனா். ஆனால், அருகில் இரு சக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த மற்றொருவருடன் திருடன் தப்பிச்சென்றுவிட்டான்.

இது குறித்து தங்கப்பொண்ணு பழனி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனா். அப்போது, சங்கிலியை பறித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பித்த நபா்களின் படம் தெளிவாகப் பதிவாகியிருப்பது தெரியவந்தது. இந்த பதிவை வைத்து திருடா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com