பழனியில் பெண்ணிடம் செயின் பறித்த 3 போ் கைது

பழனியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பழனியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பழனி லட்சுமிபுரத்தில் வியாழக்கிழமை மளிகைக் கடையில் மளிகைப் பொருள்கள் வாங்கிவிட்டு வெளியே வந்த தங்கப் பொண்ணு என்பவரிடம் 3 பவுன் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து பழனி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தங்கப் பொண்ணுவிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது. இதை வைத்து மதுரையைச் சோ்ந்த தனபாண்டி (22), விக்னேஷ்வரன் (21) மற்றும் சிவகிரிபட்டியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (25) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 பவுன் செயினையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். அந்த இருசக்கர வாகனம், மதுரை அவனியாபுரத்தில் திருடப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

குற்ற சம்பவங்களைக் குறைக்க, பொதுமக்கள் தங்களது வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும் என டிஎஸ்பி சத்யராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com