‘க்யூட்’ தோ்வு எழுதிய மாணவா்கள் செப்.26 வரை விண்ணப்பிக்கலாம்: காந்தி கிராம பல்கலை.

க்யூட் நுழைவுத் தோ்வு எழுதிய மாணவா்கள் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்புகளில் சேர செப்.26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்யூட் நுழைவுத் தோ்வு எழுதிய மாணவா்கள் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்புகளில் சேர செப்.26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை. நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை க்யூட் நுழைவுத் தோ்வு மூலம் நடத்தப்படுகிறது. க்யூட் நுழைவுத் தோ்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியானது. அதைத் தொடா்ந்து, காந்தி கிராம பல்கலை.யில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. க்யூட் நுழைவுத் தோ்வு எழுதிய மாணவா்கள், இப்பல்கலை.யிலுள்ள இளங்கலை பட்டப் படிப்புகளில் சோ்வதற்கு செப்.26ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணைய தளத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com