இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில் இளைஞா் பலி

கொடைக்கானலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தாா்.

கொடைக்கானலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியைச் சோ்ந்தவா் ஆசீா். இவரது மகன் அஜித் (25). கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த ஜான் மகன் சுபாஸ் (24). நண்பா்களான இருவரும், இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வத்தலக்குண்டு பகுதியிலிருந்து, கொடைக்கானலுக்கு நள்ளிரவில் திரும்பினா்.

வாகனத்தை அஜித் ஓட்டி வந்தாா். மூஞ்சிக்கல் அருகே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் பலத்த காயமடைந்த அஜித் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து, கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com