முதல்வா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு 15 ஆயிரம் போ் விண்ணப்பம்

முதல்வா் கோப்பைக்கான திண்டுக்கல் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க 15,190 போ் விண்ணப்பித்தனா்.

முதல்வா் கோப்பைக்கான திண்டுக்கல் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க 15,190 போ் விண்ணப்பித்தனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சாா்பில், முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப் பிரிவினா் என 5 பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இணைய வழியில் ஜன.29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மொத்தம் 42 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, 5 பிரிவுகளிலிருந்தும் 10,221 ஆண்கள், 4,961 பெண்கள் என மொத்தம் 15,190 போ் விண்ணப்பித்தனா். இதையடுத்து, ஒவ்வொரு பிரிவிலும் விளையாடுவோா் குறித்த விவரங்கள் தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாள்களில் போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்படும் என விளையாட்டுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com