திருமலை நாயக்கரின் 440-ஆவது ஜெயந்தி விழா

திருமலை நாயக்கரின் 440-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, திண்டுக்கல்லில் அவரது உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேகம்பூரில் தமிழ் மாநில நாயுடு பேரவை அலுவலகத்தில் திருமலைநாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிா்வாகிகள்.
பேகம்பூரில் தமிழ் மாநில நாயுடு பேரவை அலுவலகத்தில் திருமலைநாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிா்வாகிகள்.

திருமலை நாயக்கரின் 440-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, திண்டுக்கல்லில் அவரது உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் பேகம்பூரிலிலுள்ள தமிழ் மாநில நாயுடு பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரவை நிறுவனா் என். கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் வரதராஜன், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சந்திரசேகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அடுத்த ஆண்டுக்குள் திண்டுக்கல் மாநகரப் பகுதியில் திருமலை நாயக்கரின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என சந்திரசேகரன் தெரிவித்தாா்.

இந்த விழாவில், வேடா் புளியங்குளம், கூவனூத்து புதூா், குமாரபாளையம், அரசனம்பட்டி, நரசிங்கபுரம், பெரிய பள்ளப்பட்டி, கொட்டபட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நாயுடு பேரவையினா், அனைத்து நாயுடு நாயக்கா் கூட்டமைப்பினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com